Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 03:24 AM

புதிதாக 724 பேருக்கு கரோனா முதியவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 724 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 434, பெண்கள் 290 என மொத்தம் 724 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 208 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 26,261 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 21,573 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 6,875 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 240 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 857 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 2,182 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7,164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் 4 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 என நேற்று7 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம்கரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 12,222 ஆகஉயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,045 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 27,800,கோவையில் 53,129, செங்கல்பட்டில் 50,557, திருவள்ளூரில் 43,020என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 248அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 48 லட்சத்து 24,699 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 64,080 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்தசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x