Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 03:24 AM

பாரதியார் பல்கலை. தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு 20-ல் தேர்வுகள் தொடக்கம்

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 20-ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன.

இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொ) விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொலைதூரக் கல்வி முறையில் கடந்த ஆண்டு மே மற்றும் டிசம்பர் மாதத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் 20-ம் தேதி முதல் இணையவழித் தேர்வுகள் தொடங்குகின்றன.

தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள் மற்றும் அறிவுரைகள் www.b-u.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x