Published : 11 Jan 2021 03:25 AM
Last Updated : 11 Jan 2021 03:25 AM
புழல் காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான்பீட்டர். இவர் கடந்த 8-ம் தேதி புழல் ஜங்ஷன் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் காரும் மினி சரக்கு வாகனமும் ஒன்றோடு ஒன்று உரசியுள்ளன.
கார் ஓட்டுநர் கலாநிதி, சரக்கு வாகனத்தின் சாவியை பிடுங்கியுள்ளார். உடனே சரக்கு வாகன ஓட்டுநர் சிரஞ்சீவி, ஜான்பீட்டரிடம் முறையிட்டுள்ளார். அவரும் சாவியை வாங்கி ஓட்டுநரிடம் கொடுத்துள்ளார். அப்போது கார் ஓட்டுநர் கலாநிதியின் தம்பி தயாநிதி, ஓட்டுநர் சிரஞ்சீவியையும், ஜான் பீட்டரையும் தாக்கியுள்ளார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், உதவி ஆய்வாளரை தாக்கிய தயாநிதியை கைது செய்தனர். இவர் சென்னை காவல் ஆய்வாளர் ஒருவரின் மகன் என்பது விசாரணையில் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT