Published : 11 Jan 2021 03:25 AM
Last Updated : 11 Jan 2021 03:25 AM

செவி, பார்வை மாற்றுத் திறனாளிகள் திறன்பேசி பெற விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் செவி, பார்வை மாற்றுத் திறன் கொண்டவர்கள் திறன்பேசிகளுக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் 2020-21-ம் நிதி ஆண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட செவி மற்றும் பார்வை மாற்றுத் திறன் கொண்ட கல்லூரி பயில்வோர், தனியார் நிறுவன பணியாளர்கள், வேலையில்லா பட்டதாரிகள், சுய தொழில் புரிவோர் ஆகியோருக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள்(ஸ்மார்ட் போன்) வழங்கப்பட உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், 2 மார்பளவு புகைப்படம், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான சான்று, கல்லூரியில் பயில்வதற்கான கல்விச் சான்று, வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள சான்றுகளுடன், ‘மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி’ என்ற முகவரியில் விண்ணப்பம் பெற்று, நாளை (12-ம் தேதி) நிரப்பி அளித்திட வேண்டும். மத்திய, மாநில அரசில் பணி புரிவோர், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோர் இத்திட்டம் மூலம் பயன்பெற முடியாது. மாற்றுத் திறன் கொண்ட, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x