Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM
தை மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கோவில்பட்டி வழியாக பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். பக்தர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பசுவந்தனை சாலையில் கோவில்பட்டி காவல்துறை மற்றும் ஜே.சி.ஐ. சார்பில் முகாம் நடந்தது.
போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நாராயணன் தலைமை வகித்தார். ஜே.சி.ஐ. தலைவர் முரளிகிருஷ்ணன், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் முன்னிலை வகித்தனர்.
பக்தர்களுக்கு சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், தலைமைக் காவலர் பாலசுப்பிரமணியன், போக்கு வரத்து காவலர் பெருமாள்ராஜ் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT