Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM
அணைக்கட்டு அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் அணைக் கட்டு அடுத்த ஊனை மற்றும் ஊனை பள்ளத்தூர் பகுதிகளில் அணைக்கட்டு காவல் துறை யினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஊனை கிராமத்தைச் சேர்ந்த அம்சா (50) என்பவர், சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவ தாக தகவல் வந்தது.
அதன்பேரில், காவல் துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து அம்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து, அணைக்கட்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அம்சாவை கைது செய்தனர். பின்னர், அவரிட மிருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT