Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை அடுத்த வேளானந்தல் கிராமத்தில் வசித்தவர் வெங்கடேசன் மகன் தனுஷ்(15). இவரது வீட்டுக்கு, தண்டராம்பட்டு அடுத்த கோவிந்தம்பட்டு கிராமத்தில் வசிக்கும் சதீஷ் மகன் பாஸ்கர்(13) என்பவர் வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை, அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் ஏரியில் இறங்கியபோது நீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் சென்ற சிறுவர்கள், கிராமத்துக்கு ஓடி வந்து தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், ஏரிக்கு சென்று சிறுவர்களை மீட்கும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். இருப்பினும், தனுஷ் மற்றும் பாஸ்கர் ஆகியோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இது குறித்து வேட்டவலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x