Published : 11 Jan 2021 03:27 AM
Last Updated : 11 Jan 2021 03:27 AM

தி.மலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை கடந்தது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை கடந்தது.

தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்கிறது. அணைக்கு நேற்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 1,493 கனஅடி தண்ணீர் வருகிறது. இதன்மூலம் 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 106.25 அடியை கடந்தது. அணையில் 4,751 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 1 மி.மீ., மழை பெய்துள்ளது.

60 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 47.56 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 76 கனஅடி தண்ணீர் வருகிறது. அணை பகுதியில் 435 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 4.59 அடியாக உள்ளது. அணையில் 13.340 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 58 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x