Published : 11 Jan 2021 03:27 AM
Last Updated : 11 Jan 2021 03:27 AM
காட்பாடி: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் பணி உயர்வு பெற்ற புதிய நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா நேற்று முன்தினம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ராஜா வரவேற்றார். மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த் தனன் சிறப்புரை ஆற்றினார். இதில், பணி நிறைவு மற்றும் பணி உயர்வு பெற்ற 25 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஜயராகவன் நினைவுப் பரிசுகளை வழங்கினார். முடிவில் மாவட்டப் பொருளாளர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT