Published : 11 Jan 2021 03:27 AM
Last Updated : 11 Jan 2021 03:27 AM
திருவண்ணாமலை: தொழிலாளர் நல வாரியம் மூலம் 3,081 கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் நடைபெற்றது.
சேத்துப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், ஒரு கிலோ பருப்பு, 100 கிராம் நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை மாவட்ட தொழிலாளர் நல வாரிய உதவியாளர் ராமகிருஷ்ணன் வழங்கினார். இதில், அகில இந்திய தோட்ட தொழிலாளர் சம்மேளன மாவட்டத் தலைவர் சிவராமன், அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க மாவட்டச் செயலாளர் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT