Published : 11 Jan 2021 03:27 AM
Last Updated : 11 Jan 2021 03:27 AM

புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/தி.மலை: வேலூர் மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,989 -ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,515- ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,508- ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,246-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 18,889 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 74 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x