Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM

பெரும்பாக்கத்தில் மாற்றுத் திறனாளிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் மருத்துவா்களைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளின் உடல் பாதிப்பை கண்டறிந்து, புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் தொடா்பாக விழிப்புணா்வு மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சமூக பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆட்சியர் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுடன் பொங்கல் விழா கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வகுமார், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயதீபன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x