Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

மதுரை தேஜஸ் ரயில் ஜன.10 முதல் மீண்டும் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் சொகுசு ரயில் வரும் 10-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

கரோனா அச்சம் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் தேஜஸ் ரயில்களின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடைய, பொங்கல் நெருங்கவுள்ளதால், சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில்கள் (02613/02614) வரும் 10-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளன. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதேநாளில் மதியம் 12.15 மணிக்கு மதுரை செல்லும். மறுமார்க்கமாகமதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு அதேநாளில் இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வரும். திருச்சி, கொடைக்கானல் ரோடு நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x