Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

ஆந்திராவில்லாரி மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு

ஓங்கோல்

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு பகுதியைச் சேர்ந்த சத்யநாராயணா குடும்பத்தினர் 2 நாட்களுக்கு முன்பு காரில் திருப்பதிக்கு வந்தனர்.

அங்கு ஏழுமலையானை தரிசித்த அவர்கள், காரில் மீண்டும்சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே மார்டூரு அருகே வந்தபோது, ஒரு வளைவில் நின்றுகொண்டிருந்த சரக்குலாரியின் பின்புறம் கார் மோதியது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x