Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

வியாசர்பாடியில் தனியார் தொழிற்சாலைநச்சு புகையை வெளியேற்றவில்லை தொழிற்சாலை நிர்வாகம் விளக்கம்

சென்னை

வியாசர்பாடியில் இயங்கி வரும் ‘டி.எம்.ராதாகிருஷ்ணா செட்டி' என்ற தொழிற்சாலை நச்சுப்புகையை வெளியேற்றவில்லை. அங்கு காற்றின் தரம் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளது என அத்தொழிற்சாலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

‘வியாசர்பாடி குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் நச்சுப்புகை வெளியேற்றும் தொழிற்சாலை: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பொதுமக்கள் புகார்’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ்' நாளிதழின் கடந்த 5-ம் தேதியிட்ட இதழில் செய்தி வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக அந்த நிறுவன அதிகாரி டி.ஜி.ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘டி.எம்.ராதாகிருஷ்ணா செட்டி' தொழிற்சாலை கடந்த 1962-ம் ஆண்டு முதல்உரிய உரிமம் பெற்று, வியாசர்பாடி தொழிற்பேட்டைக்குள் இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் இயங்கவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட காற்றுத் தர கண்காணிப்பு ஆய்வில், காற்றின் தரம் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை எதுவும் வெளியேறவில்லை.

இவ்வாறு விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x