Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

பொங்கல் புத்தக திருவிழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று தொடக்கம்

சென்னை வாசகர் வட்டம் சார்பில் பொங்கல் புத்தக திருவிழா நந்தம்பாக்கத்தில் இன்று தொடங்குகிறது.

இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சென்னைவாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் க.நாகராஜன், கே.எஸ்.புகழேந்தி, மு.பாலாஜி ஆகியோர் கூறியதாவது:

சென்னை வாசகர் வட்டம் சார்பில் பொங்கல் புத்தகத் திருவிழா, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரில் உள்ள ‘பிமேக் எக்ஸ்போ ஹால்’ என்ற அரங்கில் ஜனவரி 8-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையர் த.உதயசந்திரன், புத்தகக் காட்சியை திறந்துவைக்கிறார். பதிப்பாளர் சேதுசொக்கலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.

வரும் 18-ம் தேதிவரை நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக விற்பனை நடைபெறும்.

இத்திருவிழாவில் 40 பதிப்பகங்கள் சார்பில் 60 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. புத்தகங்களுக்கு 10 சதவீதம் கழிவும் வழங்கப்படும். வாசகர்களுக்கு நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் கிடையாது.

புத்தகக் காட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து பதிப்பகங்களின் புதிய வெளியீடுகளும் முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 ஆயிரம் புதிய வெளியீடுகள் விற்பனைக்கு வர உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x