Published : 07 Jan 2021 03:14 AM
Last Updated : 07 Jan 2021 03:14 AM

தனியார் ரயில்கள் பராமரிப்புக்காக நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட பணிமனைகளை மேம்படுத்த திட்டம்

தனியார் ரயில்களை பராமரிப்பதற்காக நாடு முழுவதும் 80-க்கும்மேற்பட்ட இடங்களில் உள்ள பணிமனைகள் மேம்படுத்தப்படவுள்ளன.

ரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்த விவேக் தேவ்ராய் குழு அளித்த பரிந்துரையின்படி பயணிகள் ரயில்களை தனியார் இயக்குவதில் மத்திய ரயில்வே அமைச்சகம் ஆர்வம் காட்டி வருகிறது.

முதல்கட்டமாக 109 வழித்தடங்களில், 151 நவீன ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ரயிலிலும் 16 முதல் 24 பெட்டிகள் இருக்கும். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும். சென்னை தொகுப்பில் மட்டும் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதற்கிடையே, தனியார் ரயில்களைப் பராமரிப்பதற்காக 80-க்கும் மேற்பட்ட பணிமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் விபரங்களையும் ரயில்வே வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில்சென்னையில் 3 பணிமனைகள், கோவை, மதுரை, கொச்சிவேலி ஆகிய பணிமனைகளும் இடம் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில்வே துறை தனியார் பங்களிப்புடன் நவீனமாக்கப்பட்டு வருகிறது. இதனால், பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும். தற்போதுள்ள ரயில்களின் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது. குறிப்பாக, தனியார் ரயில்கள் இயக்கம், பல்வேறு பிரிவுகளின் பணிகள் தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, தனியார் ரயில்களை பராமரிக்கும் வகையில் தற்போது ரயில்வேயின் கீழ் உள்ள பணிமனைகளும் இடம்பெறும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார்ரயில்களைப் பராமரிக்கும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x