Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM
உலக அளவில் கரோனா தொற்று பரவல் குறைந்திருந்த சூழலில், பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்தை இந்தியா ரத்து செய்தது.
இருந்தபோதிலும், கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் தொடக்கம் வரை பிரிட்டனில் இருந்துஇந்தியாவுக்கு வந்தவர்களையும், அவர்களுடன் தொடர்பில்இருந்தவர்களையும் பரிசோதிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் உருமாறிய புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனி முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 18,088 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். இது முந்தைய நாள் பாதிப்பை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். இதனால் நாடு முழுவதும் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 932-ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT