Published : 06 Jan 2021 03:12 AM
Last Updated : 06 Jan 2021 03:12 AM
ரஜினி, கட்சி தொடங்க வலியுறுத்தி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் வரும் 10-ம் தேதி அறவழிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதில்பங்கேற்க வேண்டாம் என்றுரஜினி மக்கள் மன்ற தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு, தேர்தல் அரசியலுக்கு தற்போது வரவில்லை என்று கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது அறிக்கையை திரும்ப பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர், வரும்10-ம் தேதி அறவழிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு நமது தலைமை மன்றம் அதிகாரப்பூர்வ அனுமதி அளிக்கவில்லை. எனவே, தென்சென்னை மேற்குமாவட்டத்தை சேர்ந்த மாவட்டநிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிநிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள்உட்பட யாரும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம்என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த முறை நடைபெற்ற அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசும்போது தனது உடல்நிலை குறித்து விரிவாக விவரித்தார். அதை ஏற்றுக்கொண்டு, அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் முழு ஒத்துழைப்பு தருவதாகவும், கட்டுப்பட்டு உடன் நிற்பதாகவும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஒருமனதாக உறுதி அளித்தனர்.
எனவே, நாம் அனைவரும் ரஜினியின் முடிவுக்கு கட்டுப்பட்டு, அவரிடம் இருந்து அடுத்தஅறிவிப்பு வரும் வரை பொறுமைகாக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT