Published : 06 Jan 2021 03:12 AM
Last Updated : 06 Jan 2021 03:12 AM
தமிழகத்தில் புதிதாக 820பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாகசுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 491, பெண்கள் 329 என மொத்தம் 820 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 235 பேருக்குவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 256 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 971 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 2,342 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7,808 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 4 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என நேற்று 11 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT