Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM
முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் உட்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாளை (ஜன.7) முதல் 10-ம் தேதி வரை நடக்கும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, தேனி, சென்னை ஆகிய மாவட்டங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.
நாளை (ஜன.7) காலை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாலை சேலம் மாவட்டம் எடப்பாடி, 8-ம் தேதி காலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், மாலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, 9-ம் தேதி காலை மதுரை மாவட்டம் திருமங்கலம், மாலை தேனி மாவட்டம் போடி நாயக்கனூர், 10-ம் தேதி காலை சென்னை ராயபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில்நடக்கும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் ஸ்டாலின் பங்கேற்கிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
16 ஆயிரம் கிராமங்கள்
அதன்படி, டிச. 23-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து திருவள்ளூர், கோவை, ஈரோடு, நாமக்கல், திருவாரூர் என்று அமைச்சர்களின் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றார்.
அதன் தொடர்ச்சியாக நாளை முதல் 10-ம் தேதி வரை 7 பேரவைத் தொகுதிகளில் நடக்கும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் ஸ்டாலின் பங்கேற்கிறார். நாளை மாலை முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி, 9-ம் தேதி மாலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் ஆகிய தொகுதிகளில் நடக்கும் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT