Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

சம்பளம் கோரி துப்புரவாளர்கள் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில், 30 வார்டுகளில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.9000 சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது பணியை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கினால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என உறுதி அளித்தனர். இதனால், மாநகரில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x