Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

ஜன.15, 26, 28-ல் மதுக்கடைகள், பார்கள் மூடல்

வரும் ஜனவரி 15-ம் தேதி திருவள்ளுவர் தினம், 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் ஜனவரி 28-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் வருகின்றன.

ஆகவே இந்த 3 நாட்களும் தமிழகத்தில உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதை ஒட்டி செயல்படும் பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடைகள் அல்லது பார்களில் எவ்வித விதிமீறல்களும் இந்த 3 நாட்களும் நடைபெறக் கூடாது என்பதற்கான உரிய அறிவுறுத்தல்களை, முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், டிப்போ மேலாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x