Published : 04 Jan 2021 03:21 AM
Last Updated : 04 Jan 2021 03:21 AM

மெரினாவில் கரை ஒதுங்கிய டால்பினைமீட்டு கடலில் விட்ட தீயணைப்பு வீரர்கள்

சென்னை

மெரினா கடற்கரையில் டால்பின் மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியது. தீயணைப்பு வீரர்கள் அதை மீட்டு கடலுக்குள் கொண்டு சென்று விட்டனர்.

சென்னை மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம் பின்புறம் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. அது நான்கரை அடி நீளம் இருந்தது. உடலில் சிறு காயங்கள் இருந்தன. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தது. டால்பின் கரை ஒதுங்கியதை பார்த்தவர்கள், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையின் மெரினா மீட்புக் குழு வீரர்கள், விரைந்து செயல்பட்டு, தங்களிடம் இருந்த பிரத்யேக படகு மூலம் டால்பினை ஆழ்கடலுக்குள் கொண்டு சென்று விட்டனர். தீயணைப்பு வீரர்களின் செயலை பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் வெகுவாக பாராட்டினர். தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினரை பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x