Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

போலி சான்றிதழ்:மாணவியின்தந்தை கைது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டுஅரங்கில் நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ஒரு மாணவியும் பங்கேற்றார். அவரது அழைப்புக் கடிதம், ரேங்க் பட்டியலை அதிகாரிகள் சரிபார்த்தபோது, அது போலி என தெரியவந்தது.

இதுதொடர்பாக சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் புகார் கொடுத்தார். அதன்பேரில், மாணவி மற்றும் அவரதுதந்தையான பல் மருத்துவர் பாலச்சந்திரன் (48) மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 3 முறை சம்மன் வழங்கியும், அவர்கள் போலீஸாரிடம் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அவர்களை தேடி கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் தனிப்படை போலீஸார் சென்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மாணவியின் தந்தையான மருத்துவர் பாலச்சந்திரனை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x