Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள சஞ்ஜிப் பானர்ஜிக்கு 4-ம் தேதி ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஏ.பி.சாஹி கடந்த டிச.31-ம்தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சஞ்ஜிப் பானர்ஜிக்கு 4-ம் தேதி காலை ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT