Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM
தமிழகத்தில் புதிதாக 945 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 582, பெண்கள் 363 என மொத்தம் 945 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 275 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 17,077 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 96,353 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 320 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,060 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 2,678 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8,615 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
17 பேர் உயிரிழப்பு
இளைஞருக்கு புதிய வகை கரோனா
நவ.25-ம் தேதியில் இருந்து பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களின் 20 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களின் சளி மாதிரிகளை புனே ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் பிரிட்டனில் இருந்து வந்த சென்னை இளைஞருக்கு உருமாறிய புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT