Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

காவல் நிலையத்தில் வாகனங்கள் திருடிய பெண் காவலர் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் சரகத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் காணாமல் போவதாக, மாவட்ட எஸ்பி நெ.மணிவண்ணனுக்கு புகார்கள் வந்தன. வாகனத் திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அன்புமணி மனைவி கிரேசியா (29), கூடங்குளம் காவல் நிலையத்தில் 2-ம் நிலை பெண் காவலராக பணிபுரிகிறார். இவர், இரவுப்பணியில் இருக்கும்போது, தனது கணவர் அன்புமணி உதவியுடன் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. கிரேசியாவையும், அவரது கணவரையும் போலீஸார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் இருக்கும் செல்போன், ஒரு வழக்கில் மீட்கப்பட்ட வெள்ளி அரைஞாண் கயிறு மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை அவர்களிடமிருந்து, போலீஸார் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x