Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM

ஆவடி அருகே மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு

ஆவடி அருகே அயப்பாக்கத்தில் வசிப்பவர்கள் விஜயகுமார் – சசிகலா தம்பதி. இவர்களுக்கு விகாஷ் (10), ரேஷ்மா( 6) என்ற குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று சசிகலா தண்ணீர் வாளியில் வாட்டர் ஹீட்டரை வைத்து சுவிட்சை போட்டவர், தண்ணீர் சூடானதும் சுவிட்சை நிறுத்தாமல் வாளியை கையில் எடுத்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற விஜயகுமாரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து, திருமுல்லைவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x