Published : 30 Dec 2020 03:16 AM
Last Updated : 30 Dec 2020 03:16 AM
பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இதையடுத்து, இந்தியா-பிரிட்டன் இடையிலான விமான சேவையை டிசம்பர் 31 வரை மத்திய அரசு ரத்து செய்தது.
இந்த தடையானது மேலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று தெரிவித்தார்.
இந்தியா – பிரிட்டன் இடையே வாரத்துக்கு 64 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT