Published : 30 Dec 2020 03:18 AM
Last Updated : 30 Dec 2020 03:18 AM

லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே நிலம் அளவீடு செய்ய ரூ.5,000 லஞ்சம் பெற்ற நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் அருகே யுள்ள கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(26). இவர் தனது இடத்தை அளந்து தனிப் பட்டாவாக மாற்ற, கல்லாத்தூர் நில அளவையர் சீனிவாசனை(47) அணுகியுள்ளார். அதற்கு அவர் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக், அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரை அணுகியுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுரைப்படி, நேற்று முன் தினம் மாலை நில அளவீடு பணி முடிந்த பின், சீனிவா சனிடம் கார்த்திக் ரூ.5,000-ஐ கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் வானதி தலைமையிலான போலீஸார் சீனிவாசனை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x