Published : 30 Dec 2020 03:18 AM
Last Updated : 30 Dec 2020 03:18 AM
கரூர்: கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளபாளையம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (36). இவர், கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரில், பிள்ளபாளையம் காலனி தெருவைச் சேர்ந்த சேகர், கம்மநல்லூரைச் சேர்ந்த தர்மலிங்கம் ஆகிய இருவரும் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக் கூறி, தன்னிடம் 2017-ம் ஆண்டு ஜன.25-ம் தேதி முதல் அதே ஆண்டு மார்ச் 1-ம் தேதி வரை ரூ.7 லட்சம் பெற்றனர்.
ஆனால், இதுவரை வேலை வாங்கித் தராததுடன் பலமுறை கேட்டும் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர் என தெரிவித்துள்ளார். புகாரின்பேரில், சேகர், தர்மலிங்கம் ஆகிய இருவர் மீது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT