Published : 30 Dec 2020 03:19 AM
Last Updated : 30 Dec 2020 03:19 AM

விவசாயி கொலை வழக்கில் 6 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக் கோணம் அடுத்த பள்ளியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பூபதி. அதே கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ரவி.

இவர்களுக்குள் நிலம் தொடர் பாக பிரச்சினை இருந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், படுகாயமடைந்த இருவரும் அரக்கோணம் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், பூபதி மேல் சிகிச்சைக் காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் இரு தரப்பினர் மீது தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பூபதி நேற்று காலை உயிரிழந்தார்.

இதையடுத்து, அடிதடி மோதல் வழக்கு கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது. கொலை வழக்கு தொடர்பாக தனியார் பள்ளி ஆசிரியர் ரவி, நந்தகுமார், கிருஷ்ணன், நரேஷ், காந்தி உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x