Published : 28 Dec 2020 07:16 AM
Last Updated : 28 Dec 2020 07:16 AM

விழுப்புரம் மாவட்டத்தில் கோயில்களில் சனிப்பெயர்ச்சி வழிபாடு

விழுப்புரம் அருகே அன்னியூர் கிராமத்தில் உள்ள திரிபுர சுந்தரி சமேத ராமநாததீஸ்வரர் கோயிலில் உள்ள சங்கடத்தை தீர்க்கும் சனி பகவானுக்கு நேற்று அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. எள் நிரப்பிய சிறிய துணிகளுடன் நல்லெண்ணை ஊற்றி 9 அகல்விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.

அப்போது திட்ட அலுவலர் மகேந்திரன், விக்கிரவாண்டி எம்எல்ஏ முத்தமிழ் செல்வன், தனிப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா உள்ளிட்டோர் வழிபட்டனர்.

இதேபோல கல்பட்டு கிரா மத்தில் உள்ள யோக சனீஸ் வரர் கோயில், கோலியனூர் வாலீஸ்வரர் கோயில், மொரட் டாண்டி விஸ்வரூப மகா சனீஸ்வரர் கோயில்களில் சனிப்பெயர்ச் சியை முன்னிட்டு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x