Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 28-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 29, 30 தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT