Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM
நாடு முழுவதும் சுங்கச்சாவடி களில் வரும் ஜன.1-ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டண வசூல் முறை கட்டாயமாகிறது. இதற்காக, சுங்கச்சாவடிகளில் கூடுதல் ஊழியர்களை நியமித்து கண் காணிப்பதாக தேசிய நெடுஞ் சாலைத் துறை தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 'பாஸ்டேக்' என்ற மின்னணு கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக் கும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன்படி, பாஸ்டேக் ஒட்டாத, செல்லாத அல்லதுசெயல்படாத பாஸ்டேக் அட்டையுடன் வரும் வாகனங் களுக்கு சுங்கச்சாவடிகளில்2 மடங்கு கட்டணம் வசூலிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கரோனா ஊர டங்கு காரணமாக இந்தத் திட்டத் தில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடி களிலும் வரும் ஜன.1-ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டண முறை கட்டாயமாக்கப்பட உள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. இதற்காக, சுங்கச்சாவடிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கள் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 48-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் உள் ளன. பாஸ்டேக் கட்டண வசூல் முறையை செயல்படுத்துவதற் கான அனைத்து கட்டமைப்பு களையும் மேம்படுத்தியுள்ளோம். வாகன உரிமையாளர்கள் பாஸ் டேக் அட்டையை உடனடியாகப் பெறும் வகையில் சுங்கச்சாவடி கள் மற்றும் அருகே உள்ள பெட்ரோல் நிலையங்களிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜன.1-ம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம் என்பதால், இப்போ திருந்தே சுங்கச்சாவடிகளில் கூடுதல் ஊழியர்களை நியமித்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT