Published : 25 Dec 2020 03:16 AM
Last Updated : 25 Dec 2020 03:16 AM
சிவகாசி: `விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன்படி சிவகாசி, விருதுநகரில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டிலேயே தமிழகத்தில்தான் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. புதிதாகத் தொழில் முதலீடுகளை ஈர்க்காத மாநிலமாக தமிழகம் உள்ளது. முதல்வர் பழனிசாமி அடிக்கல் முதல்வராக மட்டுமே இருக்கிறார்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மு.க.அழகிரி கட்சி தொடங்கினாலும் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படாது. திமுகவின் வெற்றி வாய்ப்பை யாராலும் பறிக்க முடியாது. ஏனெனில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கை பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT