Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக கொண்டு வரப்பட்டவை. எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்தியை நம்பி, இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கூடிய விரைவில் இந்த சட்டத்தின் நன்மைகளை புரிந்து கொள்வார்கள்.
அதேபோல, போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக உள்ளது. இந்த சட்டங்களில் இருந்து எந்தெந்த அம்சங்களை நீக்க வேண்டும், எவற்றை சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் கருத்து தெரிவிக்கலாம். அதனையும் அரசு ஏற்கும். விவசாயிகளுக்கு எந்த நாள் வசதியாக இருக்கிறதோ, அந்த நாளில் பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்யும். இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT