Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM
எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவர்களுக்காக, அரசுத் தேர்வுகள் துறை சார்பில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாதம் ரூ.1,250-ம், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, "கோவை கல்வி மாவட்டத்தில் 23 மையங்கள், பேரூரில் 16, எஸ்.எஸ்.குளத்தில் 23, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 10 மையங்கள் என மொத்தம் 72 மையங்களில் நடைபெறும் தேர்வில் 6,915 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT