Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM

கரோனா குணமடைந்ததால் மீண்டும் நீதிபதி கர்ணன் சிறையில் அடைப்பு

சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதிபதி கர்ணன். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் விமர்சித்து கர்ணன் பேசியிருந்த வீடியோ யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதுகுறித்த புகார்களின்பேரில் கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் நீதிபதி கர்ணனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை கடந்த 7-ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிறைக்காவலர்கள் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு இதய மற்றும் சுவாச சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், கர்ணனுக்கு கடந்த 15 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவரது உடல்நிலை சரியானது. மீண்டும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இல்லை என்பது தெரியவந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து போலீஸார் அவரை அழைத்துச் சென்று மீண்டும் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x