Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM
திருநெல்வேலி: “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், கட்சி தொடங்கியவர்கள் அனைவரும் வெற்றி பெற முடியாது” என திருநெல்வேலியில் திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் புதிய கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருநெல்வேலி சந்திப்பில் பேருந்து நிலையம் கட்டுவதாக கூறி மணல் திருட்டு நடந்துள்ளது. அரசுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். கட்சி தொடங்கியவர்கள் அனைவரும் வெற்றிபெற முடியாது. திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்” என்று தெரிவித்தார்.
கங்கைகொண்டானில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்களுடன் அவர் கலந்துரையாடினார். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் உடனிருந்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT