Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

கடற்கரைகள், ஓட்டல்களில் டிச.31-ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை

கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கடற்கரைகள், சாலைகளில் டிச.31-ம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜன.1-ம் தேதியும் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் பல் வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரு கிறது.

இந்த நோய்த் தெற்றில் இருந்து மக்களைக் காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, தமிழக அரசு முனைப்புடன் செயல் பட்டு வருகிறது. அதன்விளைவாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அரசின் சிறப்பான செயல்பாட்டாலும் பொதுமக் களின் ஒத்துழைப்பாலும் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில், டிச.31-ம் தேதி இரவு பொதுவாக நடத்தப்படும் புத்தாண்டு விழா கொண்டாட்டங் களில் அதிக அளவில் பொது மக்கள் பங்கேற்கக் கூடும். அதே போல, புத்தாண்டை கொண்டாடு வதற்காக டிச.31-ம் தேதி இரவு முதல் அனைத்து கடற்கரைகள், சாலைகளில் பொதுமக்கள் மிக அதிக அளவில் கூடுவர்.

இதன் காரணமாக தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப் புள்ளது. சில வெளிநாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தற் போது மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. இந்தச் சூழலில், நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதுபோன்ற இதர இடங்களில் உணவகங்கள் வழக் கம்போல் செயல்படும். அதே நேரத்தில் டிச.31-ம் தேதி இரவு நடத்தப்படும் புத்தாண்டு கொண் டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி இல்லை. அனைத்து கடற்கரைகள், முக்கிய சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை. டிச.31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கரோனா தொற்று ஏற்படாத வண்ணம் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகிய வற்றை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அனை வரின் நலன் கருதி தமிழக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x