Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM

55 ஆண்டுக்குப் பிறகு ஹல்திபாரி - சிலாஹதி இடையே ரயில் சேவை தொடக்கம் இந்தியா - வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் இருதரப்பு மேம்பாடு குறித்து பிரதமர்கள் மோடி, ஷேக் ஹசீனா ஆலோசனை

இந்தியா - வங்கதேசம் இடையிலான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் பங்கேற்றனர்.

இந்தியா - வங்கதேசம் இடையேகாணொலிக் காட்சி மூலம் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் கலந்து கொண்டனர். மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையேவிவசாயம், ஜவுளி, ஹைட்ரோ கார்பன் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது உட்பட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்திய - வங்கதேச எல்லைகளை இணைக்கும் வகையில்ஹல்திபாரி - சிலாஹதி இடையேரயில் பாதையை இரு நாடுகளின்பிரதமர்களும் கூட்டாக தொடங்கி வைத்தனர். கடந்த 1965-ம் ஆண்டுவரை இந்த ரயில் பாதை பயன்பாட்டில் இருந்தது. 55 ஆண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி, வங்கதேச தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் குறித்த டிஜிட்டல் கண்காட்சியை மோடியும், ஷேக் ஹசீனாவும் திறந்து வைத்தனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடிபேசுகையில், ‘‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கையின் அடிப்படையில், வங்கதேசம் முக்கிய தூணாக விளங்குகிறது. நான் பிரதமராக பதவியேற்ற நாளில் இருந்தே வங்கதேசத்துடனான உறவு ஆழமாகவும் வலுவாகவும் விளங்க முன்னுரிமை அளிக்கிறேன். கரோனா தொற்றால் இந்த ஆண்டுசவாலாக இருந்தது உண்மை. ஆனால், இந்த சவாலான நேரத்திலும் இந்தியா - வங்கதேசம் இடையிலான ஒத்துழைப்பு தீவிரமாக இருந்தது. வங்கதேசத்தின் வெற்றியை உங்களுடன் இணைந்து கொண்டாடுவது எங்களுக்கு கிடைத்த பெருமை. வங்கதேசம் விடுதலை அடைந்து பொன்விழா கொண்டாடும் இந்த நேரத்தில் போரில் வீரமரணம் அடைந்தவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’’ என்றார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசுகையில், ‘‘வங்கதேசவிடுதலைக்கு ஆதரவு அளித்தஇந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். போரில் உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கரோனா தொற்றை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டது. இதற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x