Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதைத் தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர்மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். 7 நாட்கள் அவர் தனிமையில் இருப்பார். எனினும், விதிமுறைகளைப் பின்பற்றி கவனமுடன் அவர் தனது வழக்கமான பணிகளை தொடர்வார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT