Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM
சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 21-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
15 நாட்கள் இடைவெளிக்குள் 2 முறை காஸ் சிலிண்டர் விலையைமத்திய பாஜக அரசு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கரோனா நெருக்கடியால் பெரும்பாலான குடும்பங்களில், வேலைவாய்ப்பை இழந்து பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், பெட்ரோல்,டீசல், சமையல் காஸ் விலை உயர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதத்திலிருந்து 5 முறை சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இப்போது 15 நாட்கள் இடைவெளியில் 100ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.710 ஆகஉள்ளது. இந்த விலை உயர்வு தாய்மார்களுக்கு பெரும் சுமையைஏற்படுத்தியுள்ளது.
எனவே, சமையல் காஸ் விலைஉயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மகளிரணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 21-ம் தேதி மாலை 3.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தப் போராட் டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT