Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM

ஜெ. நினைவிட பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

சென்னை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆர்.பாண்டியராஜனை தமிழக அரசு நியமித்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை செயலர் கே.மணிவாசன் வெளியிட்ட அரசாணை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட பணிகளை கண்காணிக்க, கட்டுமானத் துறையில்நிபுணத்துவம் பெற்ற, பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கண்காணிப்பு பொறியாளர்ஆர்.பாண்டியராஜனை நியமிக்கலாம் என்று பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் அரசுக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து, பாண்டியராஜனை 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

அவர், இந்த பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுடன், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x