Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM

கர்நாடக பெண் போலீஸ் அதிகாரி தற்கொலை2 ஆண் நண்பர்கள் உட்பட 4 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரு மாநகர சிஐடி போலீஸ் பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் லட்சுமி (33). கடந்த 2017-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கோனனகுன்டேவில் வசிக்கும் இவர் நேற்று முன்தினம் இரவு அன்னபூர்ணேஸ்வரி நகரில் உள்ள நண்பரின் வீட்டில் நடந்த விருந்தில் பங்கேற்றுள்ளார். பின்னர் ஓய்வெடுப்பதாகக் கூறி தனி அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் நண்பர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, லட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் லட்சுமியின் மரணத்துக்கான காரணம் குறித்து குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து லட்சுமியுடன் இரவு விருந்தில் பங்கேற்ற 2 ஆண் நண்பர்கள் உட்பட 4 பேரை தற்கொலைக்கு தூண்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x