Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

நகர்ப்புற வளரிளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.44 கோடி தமிழக சுகாதாரத் துறை அரசாணை

நகர்ப்புற பகுதிகளில் உள்ள வளரிளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை அரசு சார்பில் இலவசமாக வழங்க ரூ.44.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணையை சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வளரிளம் பெண்கள் நலன் காக்க பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வளரிளம் பெண்கள் ஆகியோருக்கு மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தைக் கடைபிடிக்கும் வகையில், சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நகர்ப்புறங்களிலும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர்பழனிசாமி, 110 விதியின்கீழ் அண்மையில் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, மொத்தமாக ரூ.44.15கோடி மதிப்பீட்டில் நாப்கின்களை கொள்முதல் செய்வதற்கு அனுமதி கோரி பொது சுகாதாரத் துறைசார்பில் அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது. அதைப் பரிசீலித்த அரசு, அத்தொகையை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் வாயிலாக நாப்கின்களை கொள்முதல் செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x