Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

ஆதிதிராவிடர் நலத் துறையில் முறைகேடு? மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை

கோவை: கோவையை சேர்ந்த அருந்ததியர் முன்னேற்றக் கழக தலைவர் மணியரசு, தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்துக்கு அனுப்பிய மனுவில், “கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கறவை மாடுகள் பல இறந்துவிட்டன. மாடுகள் விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது. தகுதியற்ற நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் நலத் திட்ட குழு கூட்டங்கள் கடந்த சில மாதங்களாக நடத்தப்படவில்லை. ஆதிதிராவிடர்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிவுறுத்தல்படி, இப்புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மாவட்ட வருவாய் அலுவலருக்கு (விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நில எடுப்பு) மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மனுதாரர் மணியரசுவிடம் நேற்று விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து மணியரசு கூறும்போது,‘‘ஆதிதிராவிடர்களுக்காக, 13 வகையான குழுக்கள் உள்ளன. பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவை ஏதும் தற்போது செயல்படுத்தப்படவில்லை. விசாரணையின்போது, முழு விவரங்களையும் தெரிவித்தேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x