Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM
இந்தியா - கனடா இடையே வெளியுறவு செயலாளர்கள் அளவிலானபேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியா - கனடா நாடுகள்இடையே இருதரப்பு உறவுகள்குறித்து வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நேற்று நடப்பதாக இருந்தது. வெளியுறவு அமைச்சக செயலாளர் ரிவா கங்குலி தாஸ் இந்தியா சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாக இருந்தார்.
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கான தேதி வசதியானதாக இல்லை என்று இந்தியா தரப்பில்தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்துஇருதரப்பு வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார். இந்தியாவின் உள் விவகாரங்களில் கனடா பிரதமர் தலையிடுவது குறித்து அந்நாட்டு தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், இருதரப்பு உறவு பாதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.
இந்நிலையில், இரு நாடுகளிடையே வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை தேதி வசதியானதாக இல்லைஎன்று இந்தியா கூறியதால் பேச்சுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பது இருதரப்பு உறவில் நெருடல் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கனடா வெளியுறவு அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT